சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

ஆஸ்திரேலியாவில் புயல்: மூவர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவின் பிளாக்பர்னில் ஏற்பட்ட புயலால் 4 வயது குழந்தை உள்பட 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

News image

புயலால் சீர்குலைந்த ஆஸ்திரேலியா

Updated On :28 ஆகஸ்ட் 2020, 10:32 am

DIN

ஆஸ்திரேலியாவின் பிளாக்பர்னில் ஏற்பட்ட புயலால் 4 வயது குழந்தை உள்பட 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் பிளாக்பர்னில் வியாழக்கிழமை ஏற்பட்ட புயல் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் நகரில் மின்வசதி தடைபட்டது.

சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மரங்கள் சாய்ந்ததால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டின் மீது விழுந்த மரத்தால் அயன் கபூர் என்ற 4 வயது சிறுவன் உள்பட 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மின்சார பாதையில் விரிவான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், முழுவதுமாக மீட்டமைக்க சிறிது காலமாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.