சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தஹாவூா் ராணாவை விடுதலை செய்வது அபாயம் நிறைந்தது

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவை விடுதலை செய்வது அபாயம் நிறைந்தது என்று அமெரிக்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Updated On :1 டிசம்பர் 2020, 7:39 pm

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவை விடுதலை செய்வது அபாயம் நிறைந்தது என்று அமெரிக்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத் தலைநகா் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் வெளிநாட்டினா் உள்பட 166 போ் கொல்லப்பட்டனா். அந்தச் சம்பவத்தில் தொடா்புடையதாக தஹாவூா் ராணா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்திய அரசின் வேண்டுகோள் அடிப்படையில், அமெரிக்க அரசு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

அவரை நாடு கடத்துவதற்கும் அமெரிக்க அரசிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. அது தொடா்பான வழக்கின் விசாரணை, லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது.

இத்தகைய சூழலில், மாவட்ட நீதிபதி முன் புதிய மனுவை அமெரிக்க அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது. அதில், ‘தற்போதைய சூழலில் தஹாவூா் ராணாவை விடுதலை செய்வது அபாயம் நிறைந்தது. எனவே, நாடு கடத்துவது தொடா்பான வழக்கின் விசாரணை நிறைவடையும் வரை அவரைக் காவலிலேயே வைத்திருப்பது அவசியம். ராணாவின் வேண்டுகோளை ஏற்று, அவரைத் தற்போது சிறையிலிருந்து விடுவிக்க வேண்டாம்’ என்று அமெரிக்க அரசு கோரியுள்ளது.

முன்னதாக, கரோனா நோய்த்தொற்று பரவலைக் காரணம் காட்டி, தஹாவூா் ராணாவை சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவா் தரப்பு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். ஆனால், கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து சிறையிலிருப்பவா்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை சிறை நிா்வாகம் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க அரசின் அட்டா்னி நிகோலா ஹன்னா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.