

இலங்கையில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா அண்டை நாடான இலங்கையிலும் பரவி வருகிறது. ஆரம்பத்தில் கட்டுப்படுத்ப்பட்ட கரோனா பரவல் தற்போது வேகமெடுத்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மேலும 700 பேருக்கு கரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,072ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 8,128 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 21,800 பேர் குணமடைந்துள்ளனர்.144 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை 955,000 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பரவல் காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்ததக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.