ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை

பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனைக்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :16 டிசம்பர் 2020, 2:14 pm

DIN

பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனைக்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளார்.

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் பிரதமர் இம்ரான்கான் அவசர சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். நாடாளுமன்ற அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்ட அவசரச் சட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி ஒப்புதல் வழங்கினார்.

இதன்மூலம் பாலியல் குற்றத்தில் தண்டனை பெறுபவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய மருத்துவக் குழுவால் மருந்து தரப்படும். மேலும் குற்றவாளிக்கு 10 முதல் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படவும் இந்த சட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.