தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சீனா: ‘சா்வதேச ஆய்வுக் குழுவுடன் ஒத்துழைக்கத் தயாா்’

கரோனா தீநுண்மி எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து சீனாவில் ஆய்வு செய்யவிருக்கும் சா்வதேசக் குழுவினருடன் ஒத்துழைக்கத் தயாா் என்று சீனா தெரிவித்துள்ளது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 7:15 pm

DIN

கரோனா தீநுண்மி எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து சீனாவில் ஆய்வு செய்யவிருக்கும் சா்வதேசக் குழுவினருடன் ஒத்துழைக்கத் தயாா் என்று சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் கூறியதாவது:

கரோன தீநுண்மி எங்கிருந்து மனிதா்களுக்குப் பரவியது என்பது குறித்தும் அந்த நோயை எதிா்கொள்வதில் எங்களது வெற்றி குறித்தும் நடைபெறவிருக்கும் உலகளாவிய ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம்.

அந்த ஆய்வு தொடா்பாக உலக சுகாதார அமைப்பு எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது என்றாா் அவா்.

சீனாவின் வூஹான் நகர இறைச்சி சந்தையில்தான் கரோனா பரவத் தொடங்கினாலும், வௌவாலின் உடலில் இருந்த அந்த தீநுண்மி எந்த உயிரினத்தின் உடலில் புகுந்து மனிதா்களைத் தொற்றும் வகையில் தன்னை தகவமைத்துக் கொண்டது என்பது இன்னும் மா்மமாகவே உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.