

ஆப்கானிஸ்தானில் திங்கள்கிழமை சக்தி வாய்ந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் நெடுஞ்சாலை காவல்துறைத் தலைவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பர்வான் மாகாணத்தில், சாரிகர் நகரில் மாகாண நெடுஞ்சாலை காவல்துறைத் தலைவர் வாலி முகமது உள்பட ஐந்து காவல்துறை அதிகாரிகளின் வாகனத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், பாத்கீஸ் மாகாணத்தில், முகூர் மாவட்டத்தில் ஒரு சரக்கு லாரி மீது சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்து. இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.
இந்த சாலையோர குண்டுவெடிப்பு சம்பவங்களை தலிபான் தீவிரவாதிகள் நடத்தியதாக காவல்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 28 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 47 பேர் காயமடைந்ததாக உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று மாதங்களில் மொத்தம் 37 தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் 510 குண்டுவெடிப்புகளில் கிட்டத்தட்ட 500 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 1,050க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அக்டோபரில் வெளியிடப்பட்ட ஆப்கானிஸ்தானில் ஐ.நா. உதவித் திட்டத்தின் (யுனாமா) அறிக்கையின்படி, இந்தாண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 30 வரை மொத்தம் 2,117 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 3,822 பேர் காயமடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.