சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வாடிகனில் எளிமையாக நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: போப் பிரான்சிஸ் பங்கேற்பு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக வாடிகன் நகரில் போப் ஆண்டவர் கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எளிமையான முறையில் நடைபெற்றது. 

News image
வாடிகனில் எளிமையாக நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: போப் பிரான்சிஸ் பங்கேற்பு
Updated On :27 ஜனவரி 2024, 6:12 pm

DIN

கரோனா அச்சுறுத்தல் காரணமாக வாடிகன் நகரில் போப் ஆண்டவர் கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எளிமையான முறையில் நடைபெற்றது. 

கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. வாடிகன் நகரில் நடப்பாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே தொடங்கியது. 

இந்நிலையில் ரோமன் கத்தோலிக்க சபையின் தலைவரான போர் பிரான்சிஸ் வாடிகன் நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.

புனித செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கரோனா பெருந்தொற்று காரணமாக இந்த நிகழ்வில் வழக்கத்திற்கு மாறாக 100க்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் முகக் கவசங்கள் அணிந்தும், ஒருவருக்கொருவர் தனிமனித இடைவெளியைப் பின்பற்றியும் மக்கள் கலந்து கொண்டனர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் சிறப்பு திருப்பலியின் போது போப் பிரான்சிச் குழந்தை இயேசுவிற்கு முத்தமிட்டார். தொடர்ந்து பிரார்த்தனைக் கூட்டத்தில் போப் ஏழைகளுக்கு உதவி செய்து இறைவனுக்கு அன்பைக் காட்டுவோம் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.