ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நேபாள அரசியல் நெருக்கடி: சீனத் தூதுக் குழுவின் 2 திட்டங்கள்

நேபாளத்தில் நிலவும் அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டுக்கு வந்துள்ள சீனத் தூதுக் குழு இரண்டு திட்டங்களை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :29 டிசம்பர் 2020, 10:06 pm

DIN

நேபாளத்தில் நிலவும் அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டுக்கு வந்துள்ள சீனத் தூதுக் குழு இரண்டு திட்டங்களை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இதுதொடர்பாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கூறியதாவது:
நேபாளம் வந்துள்ள சீன தூதுக் குழு இரு திட்டங்களை முன்வைத்துள்ளன. முதல் திட்டத்தின்படி, நாடாளுமன்ற கலைப்பை நேபாள உச்சநீதிமன்றம் ரத்து செய்தால், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இரு பிரிவுகளும் ஒன்றுசேர்ந்து புதிய தலைமையின் கீழ் ஆட்சி அமைக்க வேண்டும். இந்த திட்டம் சாத்தியமாகவில்லையெனில், இடைத்தேர்தல் நடத்தலாம் என்று அந்தக் குழு யோசனை கூறியுள்ளதாக தெரிவித்தார். 
நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஓலிக்கும், அக்கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் பிரசண்டாவுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. கருத்து வேறுபாடு முற்றியதையடுத்து, சற்றும் எதிர்பாராத விதமாக பிரதமர் சர்மா ஓலி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அந்நாட்டு அதிபர் வித்யாதேவி பண்டாரியிடம் பரிந்துரைத்தார். அந்தப் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர், அடுத்த ஆண்டு ஏப்ரல் 30, மே 10}ஆம் தேதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். இது நேபாளத்தின் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. 
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டுக்கு 4 பேர் கொண்ட சீனத் தூதக் குழு 4 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.