புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதல்: 30 பேர் பலி

பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 30 பேர் பலியாகினர். 

News image
Updated On :29 பிப்ரவரி 2020, 9:54 am

DIN

பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 30 பேர் பலியாகினர். 

பாகிஸ்தானின் ராவல் பிண்டியில் இருந்து கராச்சி நோக்கி பயணிகள் ரயில் ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இந்த ரயில் சிந்த் மாகாணத்தின் ரோஹிரி ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது பேருந்து மீது மோதியது. 

இந்த கோர விபத்தில் பேருந்து மூன்று துண்டாக உடைந்தன. இதில் 30 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சுக்கூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.