சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுலை 21ஆம் நாள் பெய்ஜிங்கில் தொழில் முனைவோருடன் இணைந்து உரையாடல் கூட்டம் நடத்தி, முக்கிய உரை நிகழ்த்தினார்.
அப்போது, ஷிச்சின்பிங் பேசுகையில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு, சீனாவில் சந்தைப் பொருளாதார அமைப்புமுறை உருவாக்கப்பட்டு இடைவிடாமல் முழுமைப்படுத்தப்பட்டு வருகிறது. பல்வகை தொழில் நிறுவனங்கள் செழிப்புடன் வளர்ந்து வருகின்றன. கொவைட்-19 தொற்று நோய், சீன மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில், முன்பு இல்லாத அளவில் பெரும் அழுத்தங்களை தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன.