மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

120 நாள்களுக்குப் பிறகு பொது முடக்கத்தை நீக்கிய நேபாளம்

கடந்த 120 நாள்களாக கரோனா காரணமாக பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்திவந்த நேபாளம், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் விலக்கிக் கொண்டுள்ளது.

News image

Nepal leaves from lockdown

Updated On :22 ஜூலை 2020, 12:04 pm

கடந்த 120 நாள்களாக கரோனா காரணமாக பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்திவந்த நேபாளம், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் விலக்கிக் கொண்டுள்ளது.

உலகம் முழுவதும்  அதிகரித்து வரும் கரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க உலக நாடுகள் பொது முடக்கத்தை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.

கடந்த மார்ச் 24 ஆம் தேதி தலைநகர் காத்மண்டுவில் பதிவான முதல் கரோனா பாதிப்பையடுத்து அந்நாட்டு அரசு பொது முடக்கத்தை அறிவித்தது.

பொதுமுடக்க நீக்கமானது, கல்வி நிறுவனங்கள், பொதுக்கூட்டங்கள், கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் கூடும் மத வழிபாட்டு இடங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு இடமளிக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை 30 முதல் சுற்றுலா சார்ந்த நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நீண்டகால கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு அறிவிப்பில் 4 மாத காலத்தை கடந்த நிலையில் தற்போது நேபாளத்தில் 17 ஆயிரத்திற்கும் அதிகமான கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.