மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 132 பேர் பலி

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 132 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :24 ஜூலை 2020, 11:59 am

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 132 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

நேபாளத்தில் கடந்த 40 நாள்களாக இடைவிடாமல் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் மொத்தமுள்ள 77 மாவட்டங்களில் 70 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டதோடு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கை இதுவரை 132 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. 

மேலும் 128 பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிட்ட அந்த ஆணையம் 53 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.