கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 132 பேர் பலி

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 132 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :24 ஜூலை 2020, 11:59 am

DIN

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 132 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

நேபாளத்தில் கடந்த 40 நாள்களாக இடைவிடாமல் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் மொத்தமுள்ள 77 மாவட்டங்களில் 70 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டதோடு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கை இதுவரை 132 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. 

மேலும் 128 பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிட்ட அந்த ஆணையம் 53 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.