மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,092 பேர் பலி: 3.912 பேருக்குத் தொற்று

மெக்சிகோவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,092 பேர் பலியாகியுள்ளதை அடுத்து, அந்த நாட்டில் இதுவரை மொத்தம் 11,792 பேர்..
மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,092 பேர் பலி: 3.912 பேருக்குத் தொற்று
Updated on
1 min read

மெக்சிகோவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,092 பேர் பலியாகியுள்ளதை அடுத்து, அந்த நாட்டில் இதுவரை மொத்தம் 11,792 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மெக்சிகன் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில், 3,912 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,01,238 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பரவலில் மெக்சிகோ தற்போது உச்சகட்ட நிலையில் உள்ளது என்றும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று துணை சுகாதார அமைச்சர் ஹ்யூகோ லோபஸ்-கட்டெல் தெரிவித்தார். 

மெக்சிகோவில் கரோனா வைரஸுக்கு சந்தேகத்திற்கிடமான அனைத்து வழக்குகளுக்கும் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச அமைப்பு பரிந்துரைத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com