உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
சீனாவில் ஹூகான் மகானாத்தில் தோன்றிய கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி மக்களை வதைத்து வருகின்றது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜூன் 24-ம் தேதி நிலவரப்படி 93.59 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
உலகளவில் கரோனாவால் 93,59,372 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,79,879 பேர் மரணம் அடைந்துள்ளனர். 50,46,272 பேர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் அதிகபட்சமாக 24,24,418 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,23,475 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 1,15,479 பேரும், ரஷ்யாவில் 5,99,705 பேரும் தொற்று நோய்க்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 4,56,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 14,483 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.