கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிலிப்பைன்ஸில் ஹெலிகாப்டர் விபத்து: காவல்துறை தலைவர் உள்பட 7 பேர் காயம்

பிலிப்பைன்ஸில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் காவல்துறை தலைவர் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். 

News image
Updated On :5 மார்ச் 2020, 8:44 am

பிலிப்பைன்ஸில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் காவல்துறை தலைவர் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் லகுணா மாகாணம் சான் பெட்ரோ நகர் அருகே உள்ள மைதானத்தில் இருந்து இன்று காலை காவல்துறை தலைவர் ஆர்ச்சி கம்போவா உள்ளிட்டோருடன் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது.

ஆனால் அந்த ஹெலிகாப்டர் எதிர்பாராதவிதமாக மேலே சென்ற உயர்மின்னழுத்த வயர் மீது உரசியதில் சிறிது நேரத்தில் தீப்பிடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், அப்பகுதியில் உள்ள சாலையில் விழுந்து நொறுங்கியது.

இதில், ஹெலிகாப்டரில் இருந்த காவல்துறை தலைவர் உட்பட 7 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.