

குவைத்: கரோனா அச்சுறுத்தல் காரணமாக குவைத்தில் உள்ள மசூதிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
மசூதிகளில் தொழுகைகள் நடத்த வேண்டாம் என்றும், வீடுகளிலேயே தொழுகை நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் குவைத்தில் உள்ள மசூதிகளில் தினந்தோறும் ஐந்து முறை நடத்தப்படும் தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. வீட்டிலேயே தொழுகை நடத்துமாறு மசூதிகளில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
குவைத்தில் 80 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை மசூதிகளில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.