புது தில்லி: கரோனா வைரஸ் பாதிப்பினால் உலக அளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தொட்டது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 843 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 17 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பினால் உலக அளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தொட்டது.
இந்திய நேரப்படி இரவு எட்டு மணி அளவில் உலகம் முழுவதும் கரோனாவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,53,244 ஆகும்.
அதேபோல பலியானவர்களின் எண்ணிக்கையில் 8,215 பேருடன் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 4,858 பேரும், சீனாவில் 3,174 பேரும் மரணமடைந்துள்ளனர்.