மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

பாகிஸ்தானில் ஒரே நாளில் 1,800 பேருக்கு தொற்று, 36 பேர் பலி: சுகாதார அமைச்சகம்

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,841 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :19 மே 2020, 8:06 am

PTI

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,841 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 

இதையடுத்து நாடு முழுவதும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,000-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 939-ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய தலைநகர் இஸ்லாமாபாத்தில் கரோனா வைரஸ் வழக்குகள் ஆயிரத்தைத் தாண்டிள்ளது. பாகிஸ்தானின் பிற பகுதிகளுக்கும் தொற்றுநோய் அதிகமாகப் பரவியுள்ளன. 

கடந்த 24 மணி நேரத்தில் 12,957 உள்பட இதுவரை 4,00,292 பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 12,489 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்  என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.