நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மணப்பெண் கைவிட்டதால் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பிரேசில் இளைஞர்

மணப்பெண் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பிரேசில் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

News image

தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட டியோகோ

Updated On :6 நவம்பர் 2020, 10:09 am

DIN

மணப்பெண் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பிரேசில் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

பிரேசில் நாட்டின் பஹியாவைச் சேர்ந்தவர் டியோகோ ரபேலோ. இவருக்கும் விட்டர் புவெனோ என்ற பெண்ணிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டியோகோ தனது திருமண வேலைகளில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் டியோகோ மற்றும் ரபேலோ ஆகிய இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டியோகா உடனான திருமணத்தை ரபேலோ ரத்து செய்ய முடிவெடுத்து அவரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் முதலில் அதிர்ச்சியடைந்த டியோகோ பின்னர் திட்டமிட்டபடி திருமணத்தை நடத்த முடிவெடுத்தார். அதன்படி அவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வதாக தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் பஹியாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் டியோகோ தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். அவரின் இந்த திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள் என 40 பேர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.