தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 3000 பேருக்கு பாதிப்பு

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப் படம்.

Updated On :26 நவம்பர் 2020, 12:38 pm

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
அண்டை நாடான பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் தொற்று பாதிப்பை திறன்பட கையாண்ட பாகிஸ்தான் தற்போது திணறி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 3,009 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இது ஜூலை மாதத்துக்கு பிறகு ஒருநாளில் பதிவான அதிக பாதிப்பாகும். இதையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,82,892ஆக உயர்ந்துள்ளது. 
அதில் அதிகபட்சமாக பஞ்சாப் மாகாணத்தில் 1,16,506 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 59 பேர் பலியானார்கள். இதன்மூலம் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7,803ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.