ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 524 பேர் பலியானதை அடுத்து, ஒருநாள் பலி எண்ணிக்கை புதிய உச்சத்தைத்தொட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்த நாட்டு சுகாதாரத் துறை கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் புதிதாக 25,487 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 21,87,990 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 524 பேர் உள்பட இதுவரை 38,062 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷியாவில் ஆரம்பம் முதலே பாதிப்பு அதிகரித்து வந்தாலும் பலி எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆனால், கடந்த நேற்றும், இன்றும் ஒருநாள் பலி 500யைத் தாண்டி பதிவாகியுள்ளது. மேலும், கடந்த மார்ச் மாதம் முதல் பதிவான ஒருநாள் பலி எண்ணிக்கையில் இதுவே அதிகமாகும். அதேபோன்று ஒருநாள் பாதிப்பும் இன்றைய தினம் அதிகபட்சமாகும்.
தற்போதுவரை 16,85,492 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 4,64,436 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மிதுனம்

அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - ரிஷபம்

ஆவேஷ் கானும் 1 ரன் த்ரில் வெற்றிகளும்..! பேட்டில் பந்து படாமலேயே 3ஆவது முறையாக வென்ற சுவாரசியம்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


