47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அணு விஞ்ஞானி கொலையின் பின்னணியில் இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு

அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதற்குப் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரானிய அதிபர் ஹசன் ரூஹானி சனிக்கிழமை குற்றம்சாட்டினார்.

News image
ஈரானிய அதிபர் ஹசன் ரூஹானி
Updated On :28 நவம்பர் 2020, 11:51 am

DIN

அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதற்குப் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரானிய அதிபர் ஹசன் ரூஹானி சனிக்கிழமை குற்றம்சாட்டினார்.

ஈரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையத்தின் தலைவர் ஃபக்ரிசாதே வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது அந்நாட்டில் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இந்தப் படுகொலையின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரானிய அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்த சம்பவம் நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியை சீர்குலைக்காது என்றும், இந்த விலைமதிப்பற்ற தியாகியின் பாதையைத் தொடர இளம் விஞ்ஞானிகளை இன்னும் உறுதியடையவர் என்றும் ரூஹானி தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்குஇரான் பதிலடி தரும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.