கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

35 ஆண்டு கனவு நனவானது; காவனின் கூண்டு காலியானது

பாகிஸ்தானின் உயிரியல் பூங்காவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த காவன் யானையின் கூண்டு வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஆனால் அதைப் பார்க்கும் போது பலரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்கள்.

News image

35 ஆண்டு கனவு நனவானது; காவனின் கூண்டு காலியானது

Updated On :30 நவம்பர் 2020, 7:32 am

DIN


பாகிஸ்தானின் உயிரியல் பூங்காவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த காவன் யானையின் கூண்டு வெறிச்சோடிக் காணப்படுகிறது. ஆனால் அதைப் பார்க்கும் போது பலரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார்கள்.

ஏனென்றால், அதுவே காவனின் 35 ஆண்டு கால கனவு. தனிமையில் வாடிய காவனின் அந்த கனவு பல விலங்குகள் நல அமைப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின்  கனவாக மாறி, இன்று நனவாகிவிட்டது.

உலகிலேயே மிக அதிக காலம் தனிமையில் வாடிய யானையாக அடையாளம் காணப்பட்ட காவன், நேற்று பாகிஸ்தானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கம்போடியா பறந்தது.

Story image

அதற்காக ஒரு வார காலத்துக்கும் மேலாக, அது சிறைவைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு அருகே ஒரு சிறப்பு உலோகக் கூண்டு தயாரிக்கப்பட்டு, அதில் அவ்வப்போது காவன் சென்று தங்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியாளர்களுக்கு ஆச்சரியம் கொடுக்கும் வகையில் காவன் அவர்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தது. அந்த கூண்டில் இருந்தபடிதான் தனது சுதந்திர வாழ்வைத் தொடர காவன் விமானத்தில் பறந்தது.

இந்திய நேரப்படி நேற்று மாலை பாகிஸ்தான் உயிரியல் பூங்காவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கம்போடியாவுக்கு காவன் புறப்பட்டது. கம்போடியா நாட்டில் திங்கள்கிழமை தரையிறங்கும் காவன் யானையை வரவேற்க தயாராக இருப்பதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நேத் பீக்த்ரா தெரிவித்துள்ளார்.

கம்போடியாவில் இருக்கும் உயிரியல் பூங்காவில் ஏற்கனவே மூன்று பெண் யானைகள் இருப்பதால், நிச்சயம் காவனின் வாழ்வில் தனிமை என்பது விரட்டப்படும் என்றே அனைவரின் எதிர்பார்ப்புமாக உள்ளது.

பாகிஸ்தானில் இருந்த ஒரே ஆசிய யானை காவன் என்பதால், அது தனது வாழ்நாளின் பல ஆண்டுகளை தனிமையிலேயே கழிக்கும் நிலை ஏற்பட்டது.

ஃபோர் பாஸ் என்ற விலங்குகள் நல அமைப்பு மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த விலங்குகள் நலக் குழுக்கள் என பலவும் இணைந்து, காவனை பாகிஸ்தானில் இருந்து வெளியே அனுப்ப பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டன. அதனை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்வதாக இருந்தால், பயணத்தின் போது அதற்கு உணவளிப்பது பெரும் சவாலாக இருந்தது. பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு காவன் நேற்று விமானத்தில் புறப்பட்டது.

உயிரியல் பூங்கா ஊழியர்களுக்கு பிரியாவிடை கொடுத்து தனது புதிய வாழ்வைத் தொடங்கி புத்துணர்ச்சியோடு புறப்பட்டுள்ளது.

காவன் மீட்புப் பணிகளில் நட்சத்திரமாக விளங்கிய பாடகி செர், கம்போடியாவில் நடைபெறும் காவன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.