சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியானார்கள்.
சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் உள்ள க்கிஷு நகரில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பல வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த சம்பவத்தில் 5 பேர் சடலங்காக மீட்கப்பட்டன.
தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும் மண்ணில் எத்தனை பேர் புதைந்தனர் என்கிற விவரம் வெளியாகவில்லை.