கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேபாளத்தில் நிலச்சரிவு: 2 பேர் பலி; 17 பேர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 17 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :3 செப்டம்பர் 2020, 5:50 am

DIN

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 17 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

நேபாளத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.

அந்தவகையில் நேற்றிரவு பெய்த தொடர் கனமழையால் மேற்கு நேபாளத்தின் பாக்லாங் இடத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.  

உடனடியாக தகவல் அறிந்து மீட்புப்படையினருடன் வந்த காவல்துறையினர் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை தேடி வருகின்றனர். நிலச்சரிவில் இருந்து 2 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன 17 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளதாக மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.