தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பிரிட்டனில் கரோனா 2ஆம் அலைக்கு வாய்ப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் கரோனா 2ஆம் அலையை எதிர்நோக்கி இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

News image

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

Updated On :19 செப்டம்பர் 2020, 1:43 pm

பிரிட்டன் கரோனா 2ஆம் அலையை எதிர்நோக்கி இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கணிக்கமுடியாத வகையில் திடீரென தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்வது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் பிரிட்டனில் கரோனா பாதிப்பின் 2ஆம் அலைக்கு வாய்ப்பிருப்பதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் சனிக்கிழமை தெரிவித்தார். 

ஆக்ஸ்போர்டுக்கு அருகிலுள்ள டிட்காட்டில் ஒரு புதிய தடுப்பூசி மையத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜான்சன், “பல வாரங்களாக நான் சொன்னது போல் இப்போது கரோனா இரண்டாவது அலை வருவதை நாம் காண்கிறோம். நான் பயப்படுகிறேன். இதனைத் தவிர்க்க முடியாது. நாம் அதைப் பார்க்கப் போகிறோம்." எனத் தெரிவித்தார்.

பிரிட்டனில் தற்போது வரை 3 லட்சத்து 85 ஆயிரத்து 936 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.