மெக்சிகோவில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைத் தாண்டியது.
உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் தொற்றுக்கு கோடிக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் மெக்சிகோவில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று ஒரேநாளில் புதிதாக 5,408 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 7,15,457 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 490 பேர் பலியாகியுள்ளனர்.
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 75,439 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மெக்சிகோவில் கரோனா தொற்று பாதிப்பின் இரண்டாம் அலை அக்டோபரில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


