ஜெர்மனியில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியது

ஒரே நாளில் 4 ஆயிரம் பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஜெர்மனியில் கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டிவிட்டது.
ஜெர்மனியில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியது

பெர்லின்: ஒரே நாளில் 4 ஆயிரம் பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஜெர்மனியில் கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டிவிட்டது.

ஜெர்மனியில் புதன்கிழமை மாலை நிலவரப்படி 1 லட்சத்து ஏழு ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரோபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது. உயிரிழப்பு 2 ஆயிரம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஜெர்மனியில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

ஒரு நபரால் பலருக்கும் கரோனா பரவி வருவதன் எதிரொலியாகவே இவ்வாறு ஒரே நாளில் பலருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com