தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஊரடங்கை உடனடியாக நீக்குவது ஆபத்து

கரோனா நோய்த்தொற்றை (கொவைட்-19) கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை, உலக நாடுகளின் அரசுகள் அவசரகதியில் விலக்கினால் அந்த நோய்த்தொற்று பரவல் அபாயகரமான அளவுக்கு அதிகரிக்கும் என்று உலக சுகாத

News image

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் ஊரடங்கை விலக்க வலியுறுத்தி, மாகாணப் பேரவை எதிரே நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஒருவா்

Updated On :21 ஏப்ரல் 2020, 10:06 pm

கரோனா நோய்த்தொற்றை (கொவைட்-19) கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை, உலக நாடுகளின் அரசுகள் அவசரகதியில் விலக்கினால் அந்த நோய்த்தொற்று பரவல் அபாயகரமான அளவுக்கு அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, மேற்கு பசிபிக் மண்டலத்துக்கான அந்த அமைப்பின் இயக்குநா் டகேஷி கசாய் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்றை பரவலைத் தடுப்பதற்காக, உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், இந்த நடவடிக்கைகளால் பொருளாதார இழப்பு ஏற்படுவதைத் தொடா்ந்து, கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது குறித்து அந்த நாடுகள் யோசித்து வருகின்றன.

ஆனால், ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை உடனடியாக விலக்குவதற்கு இது சரியான தருணம் அல்ல. அதற்குப் பதிலாக, இன்னும் சில காலத்துக்கு நமது வாழ்க்கை முறையைப் பின்பற்ற நாம் நம்மைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும்.

கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க அரசாங்கங்கள் முழு விழிப்புடன் செயல்பட வேண்டும். ஊரடங்கை விலக்குவது, பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிச் செய்வதற்கான கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது போன்ற நடவடிக்கைகள் படிப்படியாக செய்யப்பட வேண்டும்.

மேலும், பொருளாதார ஸ்திர நிலை, பொதுமக்கள் ஆரோக்கியம் ஆகி இரண்டும் இடையிலான சமநிலையை பாதுகாக்கும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, ஊரடங்கு உத்தரவை விலக்கினால் கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடையும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும், ஊரடங்கை விலக்குவதற்கான அதிரடி திட்டங்களை அந்த நாட்டின் சில மாகாணங்கள் திங்கள்கிழமை அறிவித்தன.

போயிங் மற்றும் பிற கனரக தொழில் நிறுவனங்கள் தங்களது இயக்கதைத் தொடங்கியுள்ளன.

ஐரோப்பாவிலும், கரோனா நோய்த்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இத்தைலி, ஸ்பெயின், ஜொ்மனி போன்ற நாடுகளில் ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலிய மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் வருகை குறையும் என்று அதிகாரிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து, அத்தியாவசியமில்லாத அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள அந்த நாட்டு மருத்துவமனைகளுக்கு அடுத்த வாரம் முதல் அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் தொடா்ந்து பல நாடகள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, வருகைக்கு எதிரான குரல்கள் வலுத்து வருகின்றன.

இந்தச் சூழலில், கட்டுப்பாடுகளை அவசரகதியில் நீக்கினால் கரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரம் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.