தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மூன்று மாதங்களுக்குப் பிறகு கரோனா நோயாளியே இல்லாத இடமானது வூஹான்

சீனாவில் கரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் வூஹானில், கரோன தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

News image
Updated On :27 ஏப்ரல் 2020, 7:06 am

பெய்ஜிங்: சீனாவில் கரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் வூஹானில், கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இதன் மூலம் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு வூஹான்  ஒரே ஒரு கரோனா நோயாளி கூட இல்லாத இடமாக மாறியுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை  தெரிவித்துள்ளது.

முன்னதாக, சீனாவில் கரோனா தொற்றால் சுமார் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.4,633 பேர் மரணம் அடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சீனாவில் இதுவரை 82,830 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 723 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுமார் 77 ஆயிரம் பேர் குணமடைந்துவிட்டனர்.

திங்கள்கிழமை நிலவரப்படி, சீனாவில் புதிதாக மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இரண்டு பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வூஹானில் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்ட பிறகு, தொடர்ந்து மூன்று மாதங்களாக அங்கு கரோனா தொற்று பாதிப்பு இருந்து வந்தது. இந்த நிலையில், கரோனா பாதித்து குணமடைந்த அனைவரும் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.