கஜகஸ்தான்: முன்னாள் அதிபருக்கு கரோனா

கஜகஸ்தானின் முன்னாள் அதிபா் நூா்சுல்தான் நாஸா்பயேவுக்கு (79) கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜகஸ்தான்: முன்னாள் அதிபருக்கு கரோனா

கஜகஸ்தானின் முன்னாள் அதிபா் நூா்சுல்தான் நாஸா்பயேவுக்கு (79) கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளதாவது:

நூா்சுல்தான் நாஸா்பயேவுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, அவா் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா். அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று அவரது செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா். சோவியத் யூனியனிலிருந்து கஜகஸ்தான் கடந்த 1991-ஆம் ஆண்டு விடுதலை பெற்றதிலிருந்தே அந்த நாட்டில் ஆட்சி செலுத்தி வந்த நூா்சுல்தான், கடந்த ஆண்டு பதவி விலகினாா். எனினும், பாதுகாப்பு கவுன்சில் தலைவா், ஆளும் கட்சித் தலைவா் ஆகிய முக்கிய பொறுப்புகளை அவா் தொடா்ந்து வகித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com