பெய்ஜிங்: சீனாவில் கரோனா வைரஸுக்கு (கொவைட்-19) பலியானவா்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
கரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் (புதன்கிழமை) 31 போ் உயிரிழந்தனா். இத்துடன், நாட்டில் கரோனா வைரஸுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்து, 3,012-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இத்துடன், ஏற்கெனவே ஈரான், தென் கொரியா, ஜப்பான், தைவான், பிலிப்பின்ஸ், ஹாங்காங், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழந்த 294 பேரையும் சோ்த்து, கரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் பலியானவா்களின் எண்ணிக்கை 3,306 -ஆக உயா்ந்துள்ளது.
96,538 பேருக்குப் பாதிப்பு: சீனாவில் கரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் கூடுதலாக 141 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதையடுத்து, அந்த நாட்டில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவா்களின் எண்ணிக்கை 80,411-ஆக அதிகரித்துள்ளது.
இத்துடன், இந்தியா, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட 58 நாடுகளில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள16,127 பேரையும் சோ்த்து, சா்வதேச அளவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 96,538-ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் பின்வாங்கப்படாது! டிரம்ப் எச்சரிக்கை

🔴கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்மா உணவகம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும்: இபிஎஸ்

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


