
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 91,295 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இங்கு நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 91,295 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 89.4 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய நாள் ஒருநாள் பாதிப்பு 88,973 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228,625 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,024 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் பொதுத்தேர்தலையொட்டி, அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருவது தொற்று அதிகமாவதற்கு ஒரு காரணம் என்றும் பல்கலைக்கழகம் விளக்கம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 58 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.