ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126-ஆக உயர்ந்துள்ளது.

News image
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு
Updated On :7 ஏப்ரல் 2021, 10:13 am

ANI

இந்தோனேசியாவில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126-ஆக உயர்ந்துள்ளது.

லெம்பாடா தீவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும் 12-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன. அந்தத் தீவில் 65 பேரும் பிற பகுதிகளில் 61 பேரும் கனமழைக்கு பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிலச்சரிவில் சிக்கி மேலும் பலர் காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதால், பெரும்பாலான மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவை நோக்கி புயல் நகரும் என்பதால் வெள்ளிக்கிழமை வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பல இடங்களில் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால், தொலைதூரத்தினால் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து தடைப்பட்டு வருகின்றன.

நிவாரணப் பொருள்கள் மற்றும் மீட்புப் படையினருடன் மேலும் மூன்று ஹெலிகாப்டர்கள் புதன்கிழமை வந்துள்ளதாகப் பேரிடர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரதித்யா ஜாதி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.