பஹ்ரைன் மசூதிகளில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதி

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, பஹ்ரைனில் உள்ள மசூதிகள் அனைத்தும் தொழுகைக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைன் மசூதிகளில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதி
பஹ்ரைன் மசூதிகளில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதி
Published on
Updated on
1 min read


துபை: புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, பஹ்ரைனில் உள்ள மசூதிகள் அனைத்தும் தொழுகைக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும், கரோனாவிலிருந்து மீண்டவர்கள் மட்டுமே மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதேக் காலக்கட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்த நிலையில் மார்ச் 28-ஆம் தேதி முதல் பஹ்ரைனில் உள்ள மசூதிகள் அனைத்தும் மூடப்பட்டன. பிறகு, கரோனா தொற்று குறைந்த பிறகு, படிப்படியாகத் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com