உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 29,59 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி உலகம் முழுவதும் இதுவரை 13,72,78,679 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 29,59,324 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 11,04,72,478 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,38,46,877 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,03,903 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,19,90,143 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கைகை 5,76,298-ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,36,89,453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,71,089 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,35,21,409 ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் பாதித்தோர் மற்றும் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 3,55,031 பேர் பலியாகியுள்ளனர்.