கடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

இந்தியா - ஆஸி. விமான சேவை மே 15 வரை ரத்து

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான விமான சேவை மே 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஏப்ரல் 2021, 6:11 am

DIN

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான விமான சேவை மே 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தியாவிலிருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் தடை விதித்துள்ளார்.

இதற்கு முன்பு ஹாங்காங், ஈரான், துபை, பிரிட்டன் ஆகிய நாடுகளும் இந்தியாவுடனான விமான சேவைக்கு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதால், தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவைப்படும் மருத்துவ ஆக்சிஜனுக்கு பல மாநிலங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தைத் துண்டித்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.