

கடந்த பல மாதங்களில் இல்லாத அளவுக்கு சீனாவில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பயணம் மேற்கொள்வதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பரவ தொடங்கிய கரோனா உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மற்ற நாடுகள் திணறி வந்த நிலையில், பெருந்தொற்று கட்டுப்படுத்திவிட்டதாக சீனா அறிவித்தது.
இதனிடையே, கடந்த பல மாதங்களில் இல்லாத அளவுக்கு சீனாவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பரவலை கட்டுப்படுத்தும் விதமாக லட்சக்கணக்கான மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் புதிய பயண தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு விமான நிலையத்திலிருந்து பரவிய கரோனா 20க்கும் மேற்பட்ட நகரங்களிலும் 12க்கும் அதிகமான மாகாணங்களிலும் பரவியுள்ளது. சீனாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 75 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஜூலை 20ஆம் தேதி, நாஞ்சிங் விமான நிலையத்தில் ஒன்பது பேருக்கு டெல்டா வகை கரோனா பாதிப்பு உறுதியானது.
இதையும் படிக்க: நீதிபதி மரண வழக்கு: காவல்துறை அலுவலர் இடைநீக்கம்
இதனைத் தொடர்ந்து, நாஞ்சிங் நகரில் சுற்றுலா தலங்கள் கலாசார மையங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நகரில் வாழும் 9.2 மில்லியன் பேருக்கு இரண்டு முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.