பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

வூஹானில் மீண்டும் கரோனா: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் சீனா

சீனாவின் வூஹான் மாகாணத்தில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

News image

வூஹானில் மீண்டும் கரோனா: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் சீனா

Updated On :3 ஆகஸ்ட் 2021, 10:49 am

DIN

சீனாவின் வூஹான் மாகாணத்தில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து பேரிடர் அறிவிக்கப்பட்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

கரோனா வைரஸ் கண்டறியப்பட்டு 2 ஆண்டுகள் ஆனாலும் கூட இன்றும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் பல்வேறு நாடுகள் தவித்துவருகின்றன. 

இந்நிலையில் வூஹானில் கட்டுப்படுத்தபட்ட கரோனா தொற்று பரவல் தற்போது மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. 

திங்கள்கிழமை வூஹான் மாகாணத்தில் பணியாற்றும் 7 புலம்பெயர் தொழிலாளர்களிடையே  கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் நகரின் அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

அதேபோல் நாஞ்சிங்கில் உள்ள விமான நிலையத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களிடையே தொற்றுநோய் பரவியதை உறுதிப்படுத்தியுள்ள சீனா உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கரோனா தொற்று இதுவரை 12க்கும் மேற்பட்ட நகரங்களில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதுவரை டெல்டா வகை கரோனா தொற்றுக்கு 61 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து குடியிருப்புகளிலும் பரிசோதனை மேற்கொள்வதை சீன அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

நாஞ்சிங்கிற்கு அருகிலுள்ள கிழக்கு நகரமான யாங்சோவில் இதுவரை 40 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த யாங்சோ பகுதியில் வசிக்கும் மக்கள் நாளொன்றுக்கு குடும்பத்திற்கு ஒருவர் மட்டும் வெளியில் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.