மக்களை கவர்ந்த வாத்து பொம்மைகள்..சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் குவிந்த மக்கள்

சிறப்பு ஒலிம்பிக்கின் ஒரு அங்கமாக சிகாகோ ஆற்றில் வாத்து பொம்மைகளை விடும் போட்டி நடத்தப்பட்டது.
வாத்து பொம்மை பந்தய போட்டி
வாத்து பொம்மை பந்தய போட்டி

சிறப்பு ஒலிம்பிக்கின் ஒரு அங்கமாக சிகாகோ ஆற்றில் வாத்து பொம்மைகளை விடும் போட்டி நடத்தப்பட்டது.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டுவருகிறது. அதில் ஒரு பகுதியாக, சிகாகோ ஆற்றில் வாத்து பொம்மைகளுக்கிடையே பந்தயப் போட்டி நடத்தப்பட்டது.

ஐந்து டாலருக்கு விற்கப்பட்ட வாத்து பொம்மைகளை வாங்கி, மக்கள் பந்தயத்தில் விட்டனர்.

மஞ்சள் நிறத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வாத்து பொம்மைகள் ஆற்றில் போடப்பட்ட மிதக்கவிடப்பட்டதை மக்கள் வியப்புடன் கண்டனர்.

பல போட்டிகளுக்கிடையே நடத்தப்பட்ட இந்த விசித்தரமான பந்தயத்தில் தாங்கள் வாங்கிய வாத்துகள் முந்திவருகிறதா என்பதை ஆர்வத்துடன் பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com