

தெற்கு பசிபிக் கடலில் ரிக்டர் 6.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து வானுவாட்டு தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு பசிபிக் கடலில் உள்ள சிறிய தீவு வானுவாட்டு. சுமார் 80 தீவுகள் கொண்ட தீவுக் கூட்டமாக உள்ள வானுவாட்டு தீவும் அப்பகுதியில் சுற்றுலாவிற்கு பெயர் பெற்றது.
இதையும் படிக்க | கரோனா பேரிடர்: யானைகளுக்கு உணவளிக்க நகைகளை அடமானம் வைத்த உரிமையாளர்
இந்நிலையில் புதன்கிழமை தெற்கு பசிபிக் கடலில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கம் வானுவாட்டு தீவில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பயங்கர நில அதிர்வு உணரப்பட்டது.
இதையும் படிக்க | மீண்டும் சிலை தகர்ப்பில் ஈடுபடும் தலிபான்கள்
இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானுவாட்டு தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.