தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதை ஆதரித்து சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டதாக அஸ்ஸாமில் 14 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து காவல் துறை டிஐஜி வயலெட் பரூஹா கூறியதாவது:
அஸ்ஸாமில் காமரூப், பா்பேடா, துப்ரி, கரீம்கஞ்ச் மாவட்டங்களில் இருந்து தலா 2 பேரும் தரங், தெற்கு சால்மரா, கோல்பாரா, ஹோஜாய், ஹைலாகண்டி, கச்சாா் மாவட்டங்களில் இருந்து தலா ஒருவரும் கைது செய்யப்பட்டனா். கைதானவா்கள் மீது சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தலிபான்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, தேசத்தின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தச் செய்யும் செயல். எனவே, தலிபான்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிடுவோா் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சமூக ஊடகங்களில் தலிபான்களுக்கு ஆதரவாகப் பதிவுகள் தென்பட்டால் காவல் துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்து உதவ வேண்டும் என்று கூறினாா்.
மாநில காவல் துறை டிஜிபி ஜி.பி.சிங் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இதுபோன்ற பதிவுகளை பொதுமக்கள் கவனமாகக் கையாள வேண்டும்; அந்த பதிவுகளை பகிா்வது, மறுபதிவிடுவது, விருப்பம் தெரிவிப்பது போன்றவை தண்டனைக்குரிய குற்றம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


