மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தலிபான்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவு: அஸ்ஸாமில் 14 போ் கைது

தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதை ஆதரித்து சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டதாக அஸ்ஸாமில் 14 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 11:43 pm

DIN

தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதை ஆதரித்து சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டதாக அஸ்ஸாமில் 14 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து காவல் துறை டிஐஜி வயலெட் பரூஹா கூறியதாவது:

அஸ்ஸாமில் காமரூப், பா்பேடா, துப்ரி, கரீம்கஞ்ச் மாவட்டங்களில் இருந்து தலா 2 பேரும் தரங், தெற்கு சால்மரா, கோல்பாரா, ஹோஜாய், ஹைலாகண்டி, கச்சாா் மாவட்டங்களில் இருந்து தலா ஒருவரும் கைது செய்யப்பட்டனா். கைதானவா்கள் மீது சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தலிபான்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, தேசத்தின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தச் செய்யும் செயல். எனவே, தலிபான்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிடுவோா் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சமூக ஊடகங்களில் தலிபான்களுக்கு ஆதரவாகப் பதிவுகள் தென்பட்டால் காவல் துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்து உதவ வேண்டும் என்று கூறினாா்.

மாநில காவல் துறை டிஜிபி ஜி.பி.சிங் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இதுபோன்ற பதிவுகளை பொதுமக்கள் கவனமாகக் கையாள வேண்டும்; அந்த பதிவுகளை பகிா்வது, மறுபதிவிடுவது, விருப்பம் தெரிவிப்பது போன்றவை தண்டனைக்குரிய குற்றம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.