உலகளவில் கரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இஸ்ரேல் நாட்டில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்திருக்கிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்டதில் இருந்து தற்போது வரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,005,511 என அந்நாட்டு மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது,
இதன் மூலம் 10 லட்சத்திற்கும் மேல் கரோனா பாதித்த நாடுகளில் இஸ்ரேல் 35வது இடத்தை பெற்றிருக்கிறது.
இதையும் படிக்க | இஸ்ரேல் : கடுமையாகும் கரோனா கட்டுப்பாடுகள்
கடுமையான தொற்று கட்டுப்பாடுகள் கொண்ட அந்நாட்டில் இதுவரை கரோனாவால் 6,864 பேர் இறந்திருக்கிறார்கள். மேலும் கரோனா சிகிச்சையில் 72,572 பேர் இருப்பதாகவும் 9,26,075 பேர் தொற்றில் இருந்து மீண்டிருப்பதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
59 லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட நாட்டில் 63.2 சதவீத மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









