நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

இஸ்ரேல் : கடுமையாகும் கரோனா கட்டுப்பாடுகள் 

இஸ்ரேல் நாட்டில் கரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நோய்த் தொற்று கட்டுப்பாடுகளை கடுமையாக மாற்றி வருகிறார்கள்.

News image

இஸ்ரேல் : கடுமையாகும் கரோனா கட்டுப்பாடுகள் 

Updated On :28 ஜனவரி 2024, 9:27 am IST

இஸ்ரேல் நாட்டில் கரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நோய்த் தொற்று கட்டுப்பாடுகளை கடுமையாக மாற்றி வருகிறார்கள்.

சில வாரங்களுக்கு முன் அந்நாட்டு அரசாங்கம் கரோனாவால் பெரிதாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பயணிகள் வருவதை தடை செய்திருந்தனர்.

இந்நிலையில் அங்கு 'க்ரீன் பாஸ்' என்னும் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த அட்டை இருந்தால் மட்டுமே வணிக வளாகங்கள், பூங்காக்கள் , உணவகங்கள் , நீச்சல் குளங்கள் , உடற்பயிற்சி கூடங்கள் , கலாச்சார விழாக்கள் போன்றவற்றிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட  கரோனா பாதிப்பு இல்லாதவர்களுக்கே இந்த 'க்ரீன் பாஸ்' வழங்கப்படுகிறது .

பாஸ் கிடைக்காதவர்கள் 72 மணி நேரத்திற்கு முன் எடுத்த கரோனாவால் பாதிப்படையவில்லை என்கிற சான்றிதழ்களை காண்பித்து அந்த இடங்களுக்குள்  நுழையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது . 

மேலும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடனே பொது இடத்தில் கூட வேண்டும் எனவும்  அறிவுறுத்தி இருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.