நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இஸ்ரேல் : கடுமையாகும் கரோனா கட்டுப்பாடுகள் 

இஸ்ரேல் நாட்டில் கரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நோய்த் தொற்று கட்டுப்பாடுகளை கடுமையாக மாற்றி வருகிறார்கள்.

News image

இஸ்ரேல் : கடுமையாகும் கரோனா கட்டுப்பாடுகள் 

Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:29 am

DIN

இஸ்ரேல் நாட்டில் கரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நோய்த் தொற்று கட்டுப்பாடுகளை கடுமையாக மாற்றி வருகிறார்கள்.

சில வாரங்களுக்கு முன் அந்நாட்டு அரசாங்கம் கரோனாவால் பெரிதாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பயணிகள் வருவதை தடை செய்திருந்தனர்.

இந்நிலையில் அங்கு 'க்ரீன் பாஸ்' என்னும் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த அட்டை இருந்தால் மட்டுமே வணிக வளாகங்கள், பூங்காக்கள் , உணவகங்கள் , நீச்சல் குளங்கள் , உடற்பயிற்சி கூடங்கள் , கலாச்சார விழாக்கள் போன்றவற்றிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட  கரோனா பாதிப்பு இல்லாதவர்களுக்கே இந்த 'க்ரீன் பாஸ்' வழங்கப்படுகிறது .

பாஸ் கிடைக்காதவர்கள் 72 மணி நேரத்திற்கு முன் எடுத்த கரோனாவால் பாதிப்படையவில்லை என்கிற சான்றிதழ்களை காண்பித்து அந்த இடங்களுக்குள்  நுழையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது . 

மேலும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடனே பொது இடத்தில் கூட வேண்டும் எனவும்  அறிவுறுத்தி இருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.