கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கடந்த வாரத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே 50% வர்த்தகம் அதிகரிப்பு

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையிலான வர்த்தகம் கடந்த வாரம் 50% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :24 ஆகஸ்ட் 2021, 7:59 am

DIN

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையிலான வர்த்தகம் கடந்த வாரம் 50% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய நிலையில் தலிபான்கள், ஆப்கானிஸ்தானை முழுவதுமாக  கைப்பற்றி அங்கு ஆட்சியமைப்பதற்கான பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரங்களை காலி செய்த பல்வேறு நாடுகள் தங்களுடைய நாட்டினரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் ஆப்கன் விவகாரம் குறித்தும் பல்வேறு நாடுகள் இணைந்து ஆலோசனை நடத்தி வருகின்றன. 

இந்நிலையில், தலிபான்களுக்கு ஆதரவளித்து வருவதாகக் கூறப்படும் பாகிஸ்தானுக்கு கடந்த வாரம் ஆப்கனில் இருந்து அதிக வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதன்படி, கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையிலான வர்த்தகம் கடந்த வாரம் 50% அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில், ஆப்கனுடனான இந்தியாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால் வட மாநிலங்களில் நட்ஸ் உள்ளிட்ட உலர் பழங்களின் விலை அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

ஆப்கன் எல்லைகள், துறைமுகங்கள் தற்போது தலிபான்களின் வசம் உள்ளதால், போக்குவரத்தில் பிரச்னைகள் இருந்தபோதும் ஆப்கனில் இருந்து ஏற்றுமதியும் பாகிஸ்தானில் இறக்குமதியும் அதிகரித்துள்ளன. 

தலிபான்கள் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதால், கடந்த வாரத்தில் ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதுபோல, ஆப்கனுக்கு எரிவாயு மற்றும் எண்ணெய் ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஆப்கானிஸ்தான் பொருளாதார சூழ்நிலையில் கவனம் செலுத்துவதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.