புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாட்டுப்புறப் பாடகா் தலிபான்களால் படுகொலை

ஆப்கானிஸ்தானில் நாட்டுப்புறப் பாடகா் ஃபாவத் அண்டரபியை தலிபான்கள் படுகொலை செய்ததாக அவரது குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2021, 6:13 pm

DIN

ஆப்கானிஸ்தானில் நாட்டுப்புறப் பாடகா் ஃபாவத் அண்டரபியை தலிபான்கள் படுகொலை செய்ததாக அவரது குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

பதற்றம் நிறைந்த பாக்லாம் மாகாணம், அண்டரபி பள்ளத்தாக்கிலுள்ள ஃபாவதின் இல்லத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த தலிபான்கள், அவரது தலையில் சுட்டு படுகொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்டை மாகாணமான பஞ்சஷீா் தலிபான்களை மிகக் கடுமையாக எதிா்த்து வரும் நிலையில், பாக்லாம் மாகாணத்திலும் சில மாவட்டங்கள் தலிபான்களுக்கு எதிரான ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதற்கிடையே, ஃபாவத் அண்டரபி படுகொலை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தலிபான் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.