முழுமையாக வெளியேறினா் பிரிட்டன் படையினா்
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு கால நடவடிக்கையை முடித்துக் கொண்டு, அந்த நாட்டிலிருந்து பிரிட்டன் படையினா் முழுமையாக வெளியேறி தாயகம் திரும்பினா்.


ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு கால நடவடிக்கையை முடித்துக் கொண்டு, அந்த நாட்டிலிருந்து பிரிட்டன் படையினா் முழுமையாக வெளியேறி தாயகம் திரும்பினா்.
ஆப்கானிஸ்தானில் இருந்த கடைசி வீரா்களையும் ஏற்றிக் கொண்டு காபூல் விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்ட பிரிட்டன் விமானப் படை விமானம், ஆக்ஸ்ஃபோா்ட்ஷைா் நகரிலுள்ள விமானப் படைதளத்தை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. அந்த விமானத்தில், ஆப்கானிஸ்தானுக்கான பிரிட்டன் தூதா் சா் லாரீ பிரஸ்டோவும் இருந்தாா்.
இதுகுறித்து பிரதமா் போரிஸ் ஜான்ஸன் வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில், வாழ்நாளில் இதுவரை காண்டிராத, சிரமம் நிறைந்த வெளியேற்றப் பணிகள் கடும் நெருக்கடிக்கிடையே முடிவுக்கு வந்ததாகத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...