புதிய வகை ஒமைக்ரான் கரோனா, கனடாவில் 15 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் என்ற புதிய வகை கரோனா, தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, இத்தாலி, இந்தியா உள்பட 38 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலான நாடுகள் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு, தீவிர பரிசோதனை என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், கனடாவில் கடந்த புதன்கிழமை முதல்முறையாக இருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தற்போது பாதிப்பு 15 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் பொருட்டு, 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 6 மாதங்களுக்குள் முழு தவணை தடுப்பூசி செலுத்தி, பின்னர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கட்டுப்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கனடா சுகாதாரத்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


