இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் செமேரு எரிமலை உள்ளது. இந்த எரிமலை நேற்று திடீரென வெடித்துச் சிதறத் தொடங்கியது. இதனால் எரிமலை அருகே இருந்த வீடுகள் சேதமடைந்தன.
உடனடியாக எரிமலை அருகே வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். இதுவரை 13 பேர் உடல்களை மீட்டுப் பணியில் ஈடுபட்டவர்கள் மீட்டுள்ளனர். 100 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 41 பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.