அமெரிக்காவில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
அமெரிக்காவின் டென்வர் நகரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.


அமெரிக்காவின் டென்வர் நகரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தின் டென்வர் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த அடையாளம் தெரியாத நபர் திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறியடித்து ஓடினார்.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 619 பேருக்கு கரோனா
சம்பவத்தை அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் துப்பாக்கியுடன் இருந்த அடையாளம் தெரியாத நபரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் மக்களில் 4 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களை விரைவாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...